search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி கொள்ளை"

    பழனியில் கொள்ளை கும்பல் அட்டூழியத்தால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    பழனி:

    பழனி தேவாங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். பழனி காந்தி மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ளார். இவர், தனது குடும்பத்தினருடன் ஆடிப்பெருக்கையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவில் இருந்த தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டுக்குள் சோதனை நடத்தியவர்களுக்கு பீரோவின் சாவி கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி பீரோவை திறந்த மர்ம நபர்கள், அதில் இருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டு பீரோவை மீண்டும் பூட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

    இதற்கிடையே வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் குடும்பத்தினர் பின்பக்க கதவு திறந்த நிலையில் இருப்பதை பார்த்தனர். உடனே உள்ளே சென்று பீரோ உடைக்கப் பட்டுள்ளதா? என்று பார்த்தனர்.

    ஆனால் பீரோ பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இருந்த போதிலும் பீரோவுக்குள் இருக்கும் நகை, பணம் பத்திரமாக உள்ளதா? என பார்ப்பதற்காக அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பழனி நகரில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் நகர மக்கள் பீதியில் உள்ளனர்.

    ×